districts

img

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தை கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சிராப்பள்ளி, மே 29-

    திருச்சி ரயில்வே ஜங்சன் அரிஸ்டோ மேம்பாலம் பணி கள் முடிவுற்று நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக திங்களன்று திறந்து வைத்தார்.

    தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை முகங்கள் துறையின் சார்பில்,  திருச்சி ரயில்வே ஜங்ஷன்  மேம்பாலத்தின் புதிய கட்டுமான பணிகள் கடந்த 8 ஆண்டு களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    இதில் ராணுவத்திற்கு சொந்தமான நிலத்தை கைய கப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்தால் பாலத்தின் 20  விழுக்காடு பணிகள் தடைபட்டது. அப்பணிகள் தற்போது  நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை செல்லும் தேசிய  நெடுஞ்சாலையை இணைக்கும் அணுகு சாலை போக்கு வரத்து பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்  சர் கே.என்.நேரு திங்களன்று திறந்து வைத்தார்.

   விழாவில் நாடாளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர்  திருநாவுக்கரசர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநக ராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தி நாதன், மாநகரா காவல் ஆணையர் சத்திய பிரியா,சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.