பட்டுக்கோட்டையில் வி.தொ.ச பயிற்சி முகாம்
தஞ்சாவூர், மே 17 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், ஒருநாள் பயிற்சி முகாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வி.தொ.ச ஒன்றியத் தலைவர் வி.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் ஏ.உலக நாதன் வரவேற்றார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர், “விவசாய தொழி லாளர் சங்க ஸ்தாபனம், எதிர்கால கடமை” என்ற தலைப்பி லும், மாவட்ட செயலாளர் கே.பக்கிரிசாமி, “விவசாயத் தொழி லாளர் சங்க வரலாறு, 100 நாள் வேலைத் திட்டம்” என்ற தலைப்பிலும், மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, “குடி மனைப் பட்டா” என்ற தலைப்பிலும், மாநிலக் குழு உறுப்பினர் சி.நாக ராஜன், “விவசாயத் தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்கள்” என்ற தலைப்பிலும் பேசினர். இந்த முகாமில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவோ ணம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள், சங்க பொறுப் பாளர்கள் கலந்து கொண்டனர்.
பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி பேருந்து நிறுவன உரிமையாளர் கைது
தஞ்சாவூர், மே 17 - தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரி பகுதியை சேர்ந்தவர் முகமது பாருக். இவருடைய மனைவி பிரோஜூநிசா (38), தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா கந்த புனேனியிடம் திங்களன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ரயில் நிலைய சாலையைச் சேர்ந்த முஸ்தபா (39) என்பவர் பேருந்து நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாப பங்குத் தொகை தருவதாக கூறினார். இதனை நம்பி ரூ.8 லட்சம் முதலீடு செய்துள்ளேன். மூன்று மாதங்கள் மட்டும் பங்கு தொகையை வழங்கினார். தொடர்ந்து தராமல் ஏமாற்றி வருகிறார். எனது பங்கையும், முதலீட்டுப் பணத்தை யும் திருப்பித் தராமல் ரூ.8 லட்சம் மோசடி செய்துள்ளார். எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னிடம் மோசடி செய்த பணத்தை திருப்பி பெற்றுத் தர வேண்டும்” என மனு அளித்தார். இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், காவல்துறை ஆய்வாளர் (பொ) ரவிமதி வழக்கு பதிவு செய்து முஸ்தபாவை கைது செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
100 நாள் வேலை தொழிலாளர்கள் முற்றுகை
திண்டுக்கல், மே 17- திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 48-ஆவது வார்டு பகுதியில் 100 நாள் வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு வார கால சம்பளம் வரவில்லை என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சியில் முற்றுகை போராட்டத்தில் பெண் தொழிலா ளர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அனைவருக்கும் சம்பளத்தை அவரவர் வங்கிக் கணக்கில் ஏற்றியது. இதனால் 100 நாள் வேலை பெண்கள் தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதாக உற்சாகத்துடன் சென்றனர்.