தஞ்சாவூர், டிச.31 - சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ் 81 ஆவது நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு பேராவூரணியை அடுத்த ரெட்டவயல் கடைத்தெருவில் நடைபெற்றது. தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவா னந்தம் தலைமை வகித்தார். சிபிஐ சார்பில் காயாம்பூ, மருத்து வர் சங்கம் சார்பில் செல்வராஜ், சுருதி குணசேகரன், திமுக சார்பில் பூக்கடை பழனி, சமூக ஆர்வலர் முத்தையா டெய்லர் மற்றும் பொதுமக்கள் தியாகி விஸ்வநாததாஸ் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.