districts

img

மக்கள் பயன்பாட்டிற்கு வராத மூன்று பொது கழிப்பிடங்கள்

திருப்பூர், மார்ச் 11- ஆத்துப்பாளையம் பகுதியில் மாநக ராட்சி சார்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட மூன்று கழிப்பிடங்கள் இன்றுவரையில், மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  ஆத்துப்பாளையம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில்  மாநகராட்சி கழிப்பிடம் கட்டப்பட்டு திறக் கப்பட்டது. ஆனால் இன்னும் பயன்பாட் டிற்கு வராமல் மூடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. அம்பேத்கர் நகர் பகுதியில் கழிப் பிட பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அதேபோல, திருவள்ளுவர் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் கட் டப்பட்ட கழிப்பிடம் இன்னும் பயன்பாட் டிற்கு வராமல் உள்ளது. இது குறித்த இப்பகுதி மக்கள் கூறுகை யில், ஆத்துபாளையத்தில் பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில், கட்டப்பட்டு முழு மையாக பணிகள் நிறைவடைந்தும், திறக் கப்படாமலும் மூன்று பொது கழிப்பிடங் கள் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள் ளது. ஆனால் இன்னும் மக்கள் பயன்பாட் டிற்கு வராமல் உள்ளது ஏன் என்று புரிய வில்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு கழிப்பிடங்களை பயன் பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.