districts

தூத்துக்குடி பனிமய மாதா தங்கத்தேர் திருவிழா

தூத்துக்குடி, ஆக. 4  

     தூத்துக்குடி பனிமய மாதா பேரா லய 16வது தங்கத்தேர் திருவிழாவின் முக்கிய  திருவிழாவான தங்கத்தேர்பவனி ஆக.5  அன்று நடைபெறுவதை முன்னிட்டு காவல் துறை சார்பாக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு  ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  தலைமையில் காவல்துறை அதிகாரிகளு டன் ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது.

   இவ்விழாவை முன்னிட்டு 6 காவல்துறை  கூடுதல் கண்காணிப்பாளர்கள், 23 காவல்  துணை கண்காணிப்பாளர்கள், 57 காவல்  ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள்  உட்பட தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல்,  தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருது நகர், கன்னியாகுமரி மற்றும்திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2000 போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.