திருவாரூர், அக்.10- திருவாரூர் மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றிய 24ஆவது மாநாடு சன்னாநல்லூரில் தோழர் கே.எம்.எம்.அக்பர்தீன் நினைவு அரங்கத்தில் அக் டோபர் 10 வியாழக்கிழமை யன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு ஆர்.சுந்தர மூர்த்தி, எம்.பரிமளாதேவி ஆகியோர் தலைமை வகித்த னார், மூத்த தோழர் எஸ்.தங்க வேல் கட்சிக்கொடியை ஏற்றி னார். மத்தியக்குழு உறுப்பி னர் பெ.சண்முகம் துவக்க உரையாற்றினார், ஒன்றியச் செயலாளர் கே.எம். லிங்கம் வேலை அறிக்கை சமர்ப்பித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர், டி.வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் 15 ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய ஒன்றிய செயலாளராக தியாகு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி நிறைவுரையாற்றினார்.