கரூர், செப்.1 - காவிரிக் கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிகள் நடைபெற உள்ளதையொட்டி கரூர் மாவட்டம் முழுவதும் பனை விதை கள் சேகரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டத்தில் 21-09- 2024 அன்று காவிரி கரையோரப் பகுதிகளில் பனை விதைகள் நடும் பணி துவங்கப்பட உள்ளது. அதற் காக பனை விதைகள் மாவட்டம் முழுவதும் சேகரிக்கும் பணிகள் நடைபெற உள்ளதையொட்டி, கட வூர் வட்டம் பாலவிடுதி ஊராட்சி குரும்பப்பட்டியில் பனைவிதை கள் சேகரிக்கும் பணியினை ஞாயி றன்று மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பராமரிப் பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாகவும் சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார் வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைத்து காவிரிக்கரை யில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி ஜூலை 27 அன்று துவங் கியது. இதனை இராமேஸ்வரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார். செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பனை விதைகள் சேகரிப்பும், அவற்றை தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தில் 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்பு கார் வரை தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரிக் கரை யின் இரு பக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடக்க உள்ளது. இதே போன்று, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட நீர் நிலைகளி லும் பனை விதைகளை நடும் பணி தொடர இருக்கிறது. இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்று பனை விதை களை நடுகின்றனர். இதில், பங்கேற்க இருக்கும் மாணவ, மாணவியர் கள், சமூக சேவகர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறு வனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு கோடி பனை விதை கள் நடும் பணியில் பங்கேற்ப வர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேலும் கரூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடவுசெய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பணிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கு மாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் கேட்டுக் கொண்டுள்ளார்.