districts

img

கட்சி கொடிக்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்

நாமக்கல், ஜூன் 23- பள்ளிபாளையத்தில் அரசியல் கட்சியினர் கொடிக்கம்பங்கள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர் தலை முன்னிட்டு, தமிழ் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன் கார ணமாக பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிளக்ஸ்  பேனர்கள், கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. ஏப்.19 ஆம்  தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூன் 4 ஆம் தேதி தேர்தல்  முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு அடைந்துள்ளதால், அரசியல் கட்சி யினர் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள ஆரம் பித்துள்ளனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் நகராட்சிட்பட்ட 21 வார்டுகளிலும், கொடிக்கம்பங்களை அமைக்கும் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகு திகளிலும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வர்களும் தங்கள் கட்சி கொடிக்கம்பங்களை அமைத்து வரு கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.