districts

அடிமனை பயன்படுத்துவோர் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் போராட்டம் வெற்றி குத்தகை விவசாயிகளுக்கு மீண்டும் நிலம் வழங்க அதிகாரிகள் உறுதி

தஞ்சாவூர், ஜூன் 24-  

    தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம் மன் கோவிலுக்கு சொந்த மான அரண்மனை தேவஸ் தான நிலம், சுமார் 250 ஏக்க ரில், அருகில் உள்ள இனாம் அருள்மொழிப்பேட்டை கிரா மத்தைச் சேர்ந்த சுமார் 150  குடும்பத்தினர் பல தலை முறைகளாக குத்தகை விவ சாயம் செய்து வந்தனர்.  

    இந்நிலையில், தற்போது  அந்நிலத்தை ஏலமுறையில் மூன்று ஆண்டுகளுக்கு ஏலம் விட அறிவிப்பு வெளி யானது. இதையடுத்து, தமிழ்நாடு அடிமனை பயன் படுத்துவோர் மற்றும் குத்தகை விவசாயிகள் பாது காப்பு சங்கம் சார்பாக, தஞ்சை மேல வீதியில் செயல்படும் அரண்மனை தேவஸ்தான அலுவலகம் முன்பு, கடந்த ஜூன் 21 அன்று பாதிக்கப்பட்ட 200 விவசாயிகள் பங்கேற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது.  

    இதையடுத்து ஏலம் விடு வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அடிமனை பயன் படுத்துவோர் மற்றும் குத்தகை விவசாயிகள் பாது காப்பு சங்க நிர்வாகிகள், அரண்மனை தேவஸ்தான அதிகாரிகளுடன் மீண்டும்  நடத்திய பேச்சுவார்த்தை யில், “சம்பந்தப்பட்ட ஒவ் வொரு விவசாயிக்கும் அவர் பயிரிட்ட நிலத்தை ஏல முறையில் ஒதுக்கீடு செய்வது” என அப்போது முடிவெடுக்கப்பட்டது.

    அரசுத் துறை அதிகாரி களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, மாவட்டச் செயலாளர் எம்.ராம்,  வழக்குரைஞர் கே.பன்னீர் செல்வம், கிராம விவசாயி கள் ராமதாஸ், சேதுராமன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

    சங்கத்தின் போராட்டம் மற்றும் தலையீடு காரண மாக தேவஸ்தான அதிகாரி கள், ஏற்கனவே குத்தகை விவசாயம் செய்த விவசாயி களுக்கே நிலத்தை மீண்டும் வழங்கி உள்ளனர். இதற்கு குத்தகை விவசாயிகள், சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.