பெரம்பலூர், அக்.2- பெரம்பலூரில் காது கேளாதோர் சங்கம் சார்பில் சர்வதேச சைகை மொழிகள் தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் வாரத்தையொட்டி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் துரைமுருகன் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் காதுகேளாதோர் உதவித் தொகையை 1,500-லிருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். காதுகேளாதோர் சர்வதேச சைகை மொழிகளின் தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். காதுகேளாதோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். வட்டியில்லா தொழில்கடன் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன். பின்பு, அதன் தீர்மான நகல் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரிடம் அளிக்கப்பட்டது.