districts

img

அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டிடத்தை இடித்த நிர்வாகி

வேதாரண்யம்,  ஜுன் 26 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி கிராமத்தில் சரஸ்வதி அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி செயல்படு கிறது. இந்தப் பள்ளியில் 15 மாண வர்கள் படித்து வரும் நிலை யில், பள்ளியின் நிர்வாகியும்,  பள்ளியின் தலைமையாசிரிய ருமான ரகுபதி, ஆசிரியர் கோதண்டபாணி ஆகிய இருவரும் பள்ளியில் பணியாற்றி வந்தனர். இந்த இருவருக்கும் கருத்து வேறு பாடு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. கடந்த மே மாதம் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழை (TC)  கொடுத்து பள்ளியை பூட்டி விட்டு, தலைமை  ஆசிரியர் ரகுபதி ஓய்வு பெற்றுவிட்டார். பள்ளி யில் படித்த மாணவர்களின் பெற்றோர், நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்-சிடம் புகார் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, பள்ளிக்கு அருகே  உள்ள சமுதாயக் கூடத்தில், தற்காலிகமாக ஜூன் 10 ஆம் தேதி முதல் பள்ளி செயல் பட்டு வந்தது. இந்நிலையில், செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் கோட் டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தலை மையில், வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் பூட்டி கிடந்த பள்ளியை திறந்து  செயல்பட வைத்தனர். இதனால் செவ்வா யன்று இரவு பள்ளியின் நிர்வாகி ரகுபதி,  பள்ளியின் ஓட்டு கட்டிடத்தை ஜேசிபி  கொண்டு இடித்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரை ஏற்று, வேதாரண்யம் போலீசார் பள்ளியின் நிர்வாகி ரகுபதியை தேடி வருகின்றனர். பள்ளி வழக்கம் போல் அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் செயல் பட்டு வருகிறது.  பள்ளியில் பணியாற்றிய தலைமையாசிரி யரே, பள்ளிக்கூடத்தை இடித்ததால் அப்பகு தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.