தஞ்சாவூர், மார்ச் 12- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்குத் தொடக்கப் பள்ளியில் திங்கட் கிழமை ஆண்டு விழா நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் கா.கலாராணி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற் பார்வையாளர் அ.முருகேசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ச.சித்ரா தேவி ஆண்டறிக்கை வாசித்தார். பேரா வூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் வி.சந்த்ரோதயம் நன்றி கூறினார்.