பெரம்பலூர், அக்.6 - தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் 51 ஆம் ஆண்டு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் மகேந்தி ரன் தலைமையில் நடந்த விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டார். கடந்த 2023-24 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி யளவில் முதல் மதிப்பெண் பெற்ற 85 அரசு பள்ளி மாணவர்கள், 100 சத வீதம் தேர்ச்சியளித்த 370 பட்டதாரி ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணி ஓய்வு பெறும் பட்டதாரி ஆசிரி யர்களுக்கு பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார். இதனையடுத்து செய்தியா ளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகை யில், “பெரம்பலூர் மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாக பொதுத் தேர்வில் சிறப் பிடத்தை பெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு 8 ஆவது இடத்தை பெற்றுள்ளது. அதனை மீண்டும் முத லிடத்திற்கு கொண்டு வருவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். ஆசிரியர்கள் பல்வேறு கோரிக் கைகளை வைத்திருக்கிறார்கள். அவர்களது கோரிக்கைகள் அனைத் தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்த கோரிக்கையையும் தெரிவித்திருக் கிறார்கள். இதுபோன்ற ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தால், அதை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கிறது. அக்.15 ஆம் தேதி நீதி மன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். தீர்ப்பு கிடைக்கப் பெற்ற உடனே ஆசிரியர்களின் பெரும் பாலான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விடும். பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங் களை நிரப்புவது குறித்த, நீதிமன்றத் தின் கருத்துக்காக காத்திருக்கிறோம். பள்ளிகளின் அருகே போதைப் பொருட்கள் விற்பதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறோம். ஆசிரியர்க ளின் பணிச்சுமையை குறைக்கும் பொருட்டு EMIS சிஸ்டத்தை செயல்படுத் துவதற்கு தனியாக பணியாளர்களை நியமிக்க உள்ளோம். அது முடிவற்ற பிறகு அவர்களின் பணிச்சுமை குறை யும்” என்றார். விழாவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபா கரன் உட்பட பட்டதாரி மற்றும் முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பரிசு பெற தேர்வான ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.