districts

திருச்சி முக்கிய செய்திகள்

தஞ்சை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2-ஆம் நிலை காவலர் பணிக்கு இன்று இலவச மாதிரி தேர்வு

தஞ்சாவூர், டிச.6 -  தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு  சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 2 ஆம் நிலை காவலர்களுக்கான தேர்வு டிச.10 அன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.  இதைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் மூலமாக 2 இலவச மாதிரி தேர்வு வியாழக்கிழமை மைய வளா கத்தில் நடக்கிறது. இந்த தேர்வானது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்ப டும் தேர்வு போன்று முழு பாடத்திட்டத்திற்கு நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 10.30  மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடை பெறும். விருப்பமுள்ள தேர்வர்கள் மாவட்ட  வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு காலை 10  மணிக்குள் தேர்விற்கான நுழைவுச்சீட்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத் துடன் வர வேண்டும். மாதிரி தேர்வுகள் தொடர்பான விவரங் களை 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த, போட்டித் தேர் வுக்கு தயாராகும் தேர்வர்கள் மாதிரி இத் தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம்” எனக்  கூறப்பட்டுள்ளது.

உலக மண் தின விழா 

தஞ்சாவூர், டிச.5 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில், மாவட்ட அளவி லான உலக மண் தின விழா நடைபெற்றது.  இவ்விழாவில் இயக்குநர் பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் ச.மாலதி வரவேற்றார். தொடர்ந்து, விழாவிற்கு தலைமை வகித்த வேளாண்மை  துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ச.ஈஸ்வர், ஆடு துறை மண் பரிசோதனை நிலையம் வேளாண்மை அலுவலர் மு.ஹரிணி ஆகியோர் உரையாற்றினர். பயிற்சி யில் பட்டுக்கோட்டை வட்டாரத்தைச் சார்ந்த விவசாயி கள் பலர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை வேளாண்  அலுவலர் சன்மதி நன்றி கூறினார்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி 

தஞ்சாவூர், டிச.6-  தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி  திட்டத்தின்கீழ், பேராவூரணி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட 8 குறுவள மைய பள்ளிகளில், பள்ளி மேலாண் மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.  பேராவூரணி வட்டாரம், கொன்றைக்காடு அரசு உயர்  நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்களுக்கான நிறைவு நாள் பயிற்சியை, புதன்கிழமை வட்டார கல்வி அலுவலர்கள் அ.அங்கயற்கண்ணி, கா.கலா ராணி ஆகியோர் துவக்கி வைத்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அ.முருகேசன் தலைமை வகித் தார்.  பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியில், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்,  குழந்தைகள் உரிமைகள், பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி மேலாண்மைக் குழு துணை குழுக்கள் அமைப்பது  மற்றும் அவர்களின் பணிகள் பற்றிக் கூறப்பட்டது. பயிற்சி யின் கருத்தாளராக ஆசிரியர் பயிற்றுநர் அ.ரா.சரவணன்  செயல்பட்டார்.

தெருநாய் கடித்து 2 ஆடுகள் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்

பொன்னமராவதி, டிச.6 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே  உள்ளது கருப்பு குடிப்பட்டி கிராமம். இங்கு பட்டியில் கட்டப் பட்டிருந்த ஆடுகளை தெரு நாய் ஒன்று கடித்தது. இதனால்  ஆடுகளின் சத்தம் கேட்டு அதன் உரிமையாளர் மற்றும்  அப்பகுதி மக்கள் வந்து தெருநாயை விரட்ட முயன்றனர்.  அப்போது கிராம மக்களையும் அந்த நாய் துரத்தி கடித்தது.  இதேபோன்று கிராமத்தின் வடக்கு தெரு, தெற்கு தெரு  பகுதி மக்களையும், கால்நடைகளையும் அந்த நாய் கடித்துள்ளது. நாய் கடித்து 2 ஆடுகள் இறந்த நிலையில், காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் பொன்னமராவதி மற்றும் மேலைச்சிவபுரி அரசு மருத்துவமனைகள் மற்றும்  தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர். சிலர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். பொன்னமராவதி பகுதி முழுவதும் திரியும் தெரு நாய்களை  கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்  புதிய சாலை அமைக்கும்  பணி துவக்கம் 

 தஞ்சாவூர், டிச.6 -  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கொள்ளுக்காடு ஊராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாடு திட்டத்தின்கீழ், ஆண்டிவயல்-கோரைக் குடி சாலை ரூ.33 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது.  இதற்கான பணியை பேராவூரணி சட்டப்பேரவை  உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சடை யப்பன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சாமியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரசுப் பேருந்து புளியமரத்தில் மோதி விபத்து: 6 பேர் காயம்

அரியலூர், டிச.6 - அரியலூர் அருகே செவ்வாய்க்கிழமை ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர புளிய மரத்தில் மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். தஞ்சாவூரிலிருந்து 30 பயணிகளுடன் அரியலூருக்கு அரசுப் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. பேருந்தை அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் குஞ்சு வெளி கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் (49) என்பவர் ஓட்டி வந்தார். அந்த பேருந்தில் நடத்துநராக அரியலூர் மாவட்டம்  வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா பணியில் இருந்தார். வாரணவாசியை அடுத்த தவுத்தாய்குளம் கிராமத்தின்  அருகே வந்தபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த பாபநாசத்தைச் சேர்ந்த  ரேவதி (58), அரியலூர் மாவட்டம் திருப்பெயர் பகுதியைச்  சேர்ந்த சந்திரா (40), திருவெங்கனூரைச் சேர்ந்த செம்பகவள்ளி  (23), கோவிலூரைச் சேர்ந்த பச்சையம்மாள் (25), அவரது 3  வயது மகள் அனுஸ்ரீ உள்பட 6 பேர் காயமடைந்தனர்.  காய மடைந்த அனைவரும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து அரியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள  அட்டை வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர், டிச.6 -  தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை  ஆகிய இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பய னாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும்  முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் தீபக்  ஜேக்கப் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகை களை வழங்கி வருகிறது. இதுவரை மாற்றுத்  திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.  தஞ்சை ஆட்சியர் அலுவலக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் டிச.12 (செவ்வாய்க் கிழமை), கும்பகோ ணம் பேருந்து நிலையம் அருகே உள்ள  கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் டிச.19, பட்டுக் கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கிராம சேவைக் கட்டிடத்தில் டிச.26 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக் கின்றன. இதில் எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, மனநலம், கண் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்து மருத்துவச் சான்று வழங்க உள்ளனர். மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திற னாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப் பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை அடை யாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படம், இதற்கு  முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம். இது வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திற னாளிகள், உரிய ஆவணங்களுடன் வந்து  இம்முகாமில் விண்ணப்பித்து பயன்பெற லாம்” என தெரிவித்துள்ளார்.

குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையாற்றும் தோழி விடுதி

தஞ்சாவூர், டிச.6-  தஞ்சை மாவட்டத்தில் மகளிர் பணிபுரியும் அரசு விடுதி தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு, கடந்த ஜூலை 13  முதல் தஞ்சாவூரில், புதுக்கோட்டை சாலை மேலவஸ்தா சாவடி, தெற்குத்தெரு என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியானது, பல்வேறு ஊர்கள், மாவட்டங் கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரி பவர்கள், பயிற்சிக்காக வருபவர்கள், பணிநிமித்தமாக ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தங்கும் மகளிர்களின் பாதுகாப்பு மற்றும் தேவைகளை நிவர்த்தி செய்வ தற்காக தொடங்கப்பட்ட சிறப்பு முயற்சி ஆகும். இந்த  விடுதிக்கு ‘தோழி’ என்று பெயரிடப்பட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் உள்ள இந்த விடுதியில் 60 படுக்கை கள் கொண்ட படுக்கை அறைகள் உள்ளன.  விடுதியில்  தங்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும்  பணிபுரியும் பெண் விடுதி மேலாளர், 2 பாதுகாப்பு காவ லர், 24 மணி நேரமும் இயங்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்  வகையில் பயோமெட்ரிக் உள்நுழைவு வசதி உள்ளது. மேலும் விடுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அயனிங்  வசதி, துணி துவைப்பதற்கு வாஷிங்மெஷின் வசதி உள்ளது. மழைக்காலங்களில் பெண்களுக்கு ஏதுவாக குளிப்பதற்கு சுடுநீர் வசதி, 24 மணி நேரமும் இலவச வை- பை வசதி, பார்க்கிங் வசதி, அறைகளை சுத்தம் செய்ய வும், கழிப்பறைகளை தூய்மைப்படுத்தவும் 2 பெண் பணி யாளர்கள் உள்ளனர். சுகாதாரமான காற்றோட்ட வசதி  உள்ளது. இவை அனைத்தும் மிக குறைந்த வாடகை யில் கிடைக்கிறது. விடுதியில் 2 பேர் தங்கும் வசதி, 4 பேர் தங்கும் வசதி  உள்ளது. 2 பேர் தங்கும் வசதி கொண்ட படுக்கை அறை  ரூ.3500-க்கும், 4 பேர் தங்கும் வசதி கொண்ட அறை ரூ. 2500-க்கும் என குறைந்த வாடகையில் அமைந்துள்ளது.  இது விடுதி போன்று இல்லாமல் உழைக்கும் பெண் களுக்கான இல்லமாக செயல்படுகிறது. விடுதியில் தங்கும் சேவையைப் பெற பயனர்கள் www.tnwwhcl. in என்ற ஒருங்கிணைந்த இணையதளத்தின் மூலம் தங்கள்  விவரங்களை உள்ளிடலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக்  ஜேக்கப் தெரிவித்துள்ளார். 

பள்ளி மாணவருக்கு புகையிலை பொருள்கள்  விற்றவர் கைது

குழித்துறை, டிச.6- மார்த்தாண்டம் அருகேயுள்ள புதுகாட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர்  செலஸ்டின் குமார் (45). இவர் குற்றிக்காடுவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். பள்ளி மாணவர்களுக்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை (குட்கா) பொருள்களை இவர் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் மார்த்தாண்டம் காவல் துறையினர் அப்பகுதியில் மறைந்திருந்து கண்காணித்தனர்.  அப்போது பள்ளிச்சீருடையில் வந்த  மாணவர் ஒருவருக்கு புகையிலை பொருள்களை கொடுப்பதை கண்ட போலீஸார் செலஸ்டின் குமாரை கைது செய்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அரசுப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி

அரியலூர், டிச.6- அரியலூரை அடுத்த  சிறுவளூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்ன துரை தலைமை வகித்தார். விநாயகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  முதல்வர் ஜெயா சிறப்புரை யாற்றி, பல்வேறு போட்டி களில் வென்ற மாணவர் களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி, டிச.6 - தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின்  சார்பாக சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்  தொகையாக மாதந்தோறும் ரூ.3500, மருத்து வப் படி ரூ.500 என ரூ.4 ஆயிரம் வழங்கப் பட்டு வருகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்க ளின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமை யருக்கு, அவரது வாழ்நாள் முழுவதும் ரூ. 2500 மற்றும் மருத்துவப் படி ரூ.500 என வழங்கப் படுகிறது.  இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை  முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தகுதிகள்: 1.1.2023 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று  இணைக்கப்பட வேண்டும்) தமிழ்ப்பணி ஆற்றி யமைக்கான விவரக் குறிப்பு, தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்றை இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண் ணப்பத்துடன் இணைக்க வேண்டும். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் விண் ணப்பப் படிவத்தை மண்டல, மாவட்டத் தமிழ்  வளர்ச்சித் துணை உதவி இயக்குநர் அலுவல கத்தில் நேரடியாகவோ, தமிழ் வளர்ச்சித் துறை யின் வலைதளத்திலோ (www.tamil valarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 31.12. 2023-க்குள் அளிக்க வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப் பெறும்  விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார்.