நாகப்பட்டினம், ஜூன் 19-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு அனுப்பு வதற்கு வைக்கப்பட்டுள்ள புதிய புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி திங்க ளன்று ஆய்வு செய்தார்.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு மே 15 ஆம் தேதிக்குள் புத்த கங்கள் அச்சடித்து வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறு கையில், ‘‘தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவி களுக்கு வழங்குவதற்கு 5 கோடியே 16 லட்சம் புத்த கங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் திறந்து வைத்தது குறித்த பாடம் நீக்கப்பட்டது.
ஆகையால் இந்த ஆண்டு “திராவிட மொழி குடும்பம்” என்ற பாடத்தை 9 ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் சேர்த்துள்ளோம். அடுத்த ஆண்டு செம்மொழி நாயகன் கலைஞர், தமிழகத்தின் சிற்பி கலைஞர் என்ற புதிய பாடத்திட்டம் உருவாக்க இருப்ப தாக தெரிவித்தார்.