districts

img

ஏஜி சபையை திறந்து மக்களின் வழிபாட்டிற்கு விட வேண்டும்: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கோரிக்கை

திருப்பூர், ஜூலை 1- பங்களா ஸ்டாப் அருகே விசா ரணை முடிந்தும் இரண்டரை ஆண்டு களாக ஏஜி சபையை திறந்து விடாப் படாமல் உள்ளது. அதை உடனடி யாக திறந்து மக்களின் வழிபாட்டிற்கு  விட வேண்டும் என தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  திங்களன்று மனு அளிக்கப்பட்டுள் ளது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் திங்களன்று அளிப் கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது, திருப்பூர் பங்களா ஸ்டாப் ராமையா காலனி 3 ஆவது வீதியில் ஏஜி சபை செயல்பட்டு வருகிறது. இந்த சபை கடந்த 1951 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏஜி சபையின் ஸ்தாபனத்திற்கு பத்திரப்படி பதியப்பட்ட இந்த சபை யில் 1000க்கும் மேற்பட்டோர் பிரார்த் தனை செய்கின்றனர். இந்த சபையில்  பரமானந்தம் என்பவர் மதபோதக ராக பணியாற்றி வந்தார். இவர் பாலி யல் குற்ற செயலில் ஈடுபட்டதால், ஏஜி  சபை நிர்வாகம் இவர் மீது மத ஒழுங்கு  நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து நீக்கிவிட்டது. அதன் பின்பு  மத போதகர் பரமானந்தம் அவரது ஆட்களுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பிரச் சனை செய்தனர். இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  பின்பு திருப்பூர் வடக்கு காவல் துறை யினர் வந்து ஏஜி சபையின் கதவை  பூட்டிவிட்டு சாவியை எடுத்து சென்று  விட்டனர். அதன் பின் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதியப்பட்டது. அந்த  விசாரணை வருவாய் கோட்டாட்சிய ரால் முடிக்கப்பட்டும், இன்று வரை  ஏஜி சபை மூடப்பட்டு உள்ளது. இரண்டரை ஆண்டுகளாக ஏஜி சபையை திறந்து விடாப்படாமல் உள்ளது. எனவே ஏஜி சபையை திறந்து மக்களின் வழிபாட்டிற்கு விட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டத்  தலைவர் முஹம்மது ஜாபர், மாவட்டச் செயலாளர் வை.ஆனந் தன், மாநிலக்குழு உறுப்பினர் மினி, ஏஜி சர்ச் மதபோதகர் கே.ஆனந்த் அலெக்சாண்டர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்  செ.முத்துகண்ணன், வடக்கு மாநக ரச் செயலாளர் பி.ஆர்.கணேசன் உட் பட பலர் பங்கேற்றனர்.