காஞ்சிபுரம்,அக்.18- பரந்தூர் விமான நிலை யம் அமைவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீர்வள ஆதாரங்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும் குழுவிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள் ளது. அரசு அமைத்துள்ள பரந்தூர் விமான நிலையம் ஆய்வுக் குழு தலைவரை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலை வர் என். சாரங்கன், செயலா ளர் கே. நேரு ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டத் தில் பரந்தூரில் அமைய விருக்கும் விமான நிலை யத்தால் நீர்வள ஆதாரங் கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட ஓர் ஆய்வுக் குழு அமைக் கப்பட்டுள்ளது. இதில் சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தின் நீர்வளவியல் நிபுணர்கள் மற்றும் அரசுத் துறை உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளதாக அரசின் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைத் திட ஒன்றிய அரசும், மாநில அரசும் அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் அமைக்க 13 கிராமங்களில் பட்டா நிலம் 2500 ஏக்கர், அரசு புறம்போக்கு நிலம் 2200 ஏக்கர் என்று மொத்த மாக 4,700 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த உள்ளது. 13 ஏரிகள்,குளம், குட்டைகள், பள்ளிக்கூடம், அரசு ஆரம்ப சுகாதார நிலை யம் மற்றும் 1100 வீடுகள் மற்றும் சமுதாய காடு என்று சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அழிக்கப்படும். குறிப்பாக ஏகனாபுரம் ஊராட்சி, நெல்வாய், மேல் லேரி ஆகிய கிராமங்கள் முழுமையாக அழிக்கப்படு கிறது. விமான நிலையம் அமையவிருக்கும் 13 கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல் ஏரி, குளம், குட்டை கள், பாலாறு நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகள் எதுவும் பாதிக்காமல் விமான நிலை யம் அமைக்க இயலுமா? என்பதை வல்லுநர் குழு ஆய்வு செய்ய வேண்டும். மேலும், இந்த பாதிப்புகள் அனைத்தும் தவிர்க்க முடியாது என கருதினால் உண்மை நிலையை அரசு தெரிவிக்க வேண்டும். ஏராளமான பாதிப்புக ளுடன் ஒரு விமான நிலை யம் அமைவதை நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்க ளோடு வல்லுநர் குழு ஆய்வு செய்து இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள் ளனர்.