districts

img

சுவாமிமலையிலிருந்து சென்னைக்கு மீண்டும் பேருந்து இயக்கம்

கும்பகோணம்,  மே 24-

      தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி போக்கு வரத்துத் துறை அமைச்சர்  உத்தரவின்படி, பொது மக்கள் வசதிக்காக கும்பகோ ணம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சுவாமி மலை - சென்னை பேருந்து வழித்தடம் தொடங்கி வைக்கப்பட்டது.

    தடம் எண்-201D பேருந்து  அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் இருந்து நேரடியாக சென் னைக்கு செல்வதற்கு வசதி  செய்யப்பட்டது. அது கொரோனா காலத்தில் நிறுத் தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் நலன்  கருதி, மீண்டும் சுவாமிமலை யிலிருந்து அணைக்கரை வழியாக சென்னைக்கு செல்லும் புதிய பேருந்தை மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் கொடி யசைத்து துவக்கி வைத்தார்.

    இப்பேருந்து தினமும் இரவு 10:10 மணிக்கு சுவாமி மலையிலிருந்து புறப்பட்டு அதிகாலை 5:15 மணிக்கு சென்னை சென்றடையும். சென்னையிலிருந்து தின மும் காலை 6.30 மணிக்கு புறப் பட்டு மதியம் 2.30 மணிக்கு கும்பகோணம் வந்தடையும். புதிய பேருந்து தொடக்க  நிகழ்ச்சியில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன், பொது மேலாளர் ஜெ.ஜெப ராஜ் நவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.