தஞ்சாவூர், மே 1-
காவிரி டெல்டா பகுதியில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்திட்ட, தமிழக முதல்வருக்கு நன்றியை அறிவிக்கும் பொதுக் கூட்டம் (மே 2) செவ்வாயன்று தஞ் சாவூரில் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் மத்திய, மாவட்ட திமுக சார்பில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில், காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்திட்ட, தமி ழக முதல்வருக்கு நன்றி தெரி விக்கும் பொதுகூட்டம் நடைபெற வுள்ளது.
கூட்டத்தில் திமுக பொருளாள ரும், நாடாளுமன்ற குழுத் தலை வருமான டி.ஆர்.பாலு, அமைச் சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல் வம், அன்பில் மகேஸ் பொய்யா மொழி, பாராளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம், மாநில விவ சாய அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
மேலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், மதி முக, தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள் ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஏற்கெனவே, காவிரி டெல்டா பகுதியில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தி யதாகக் கூறி, பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலைக்கு சில விவ சாய சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்ற தன் எதிரொலியாக, தமிழக முதல்வ ருக்கும் திமுகவினர் நன்றியை அறிவிக்கும் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.