திருக்காட்டுப்பள்ளியில் மாநில அளவிலான கராத்தேப் போட்டி நடந்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒக்கினாவா சோஜென் - ரியூ கராத்தே - டூ அசோசியேஷன் ஆப் இந்தியா பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் முதலிடத்தை 10 பேரும், 2 ஆம் இடத்தை 15 பேரும், 3 ஆம் இடத்தை 15 பேரும் பெற்றனர். போட்டியில் வென்ற மாணவர்களை கராத்தே தலைமைப் பயிற்சியாளர் ரென்சி ஜெயராஜ், பசுபதி கோயில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா உள்ளிட்டோர் பாராட்டினர்.