தஞ்சாவூர், ஜூன் 17-
தமிழ்நாடு அரசு தமிழர்களின் மரபு கலை யான சிலம்பாட்டத்தை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருவதற்கு, பலம் சேர்க்கும் வகையில் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில், 2022-2023 ஆம் கல்வியாண்டில் சிலம்பாட்டத்தினைப் பட்டய வகுப்பாக அறி முகம் செய்தது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மிகுந்த ஆர்வத்துடன் 205 நபர்கள் சேர்க்கை பெற்றனர். இவர்களுக்கான பரு வத்தேர்வுகளும் செய்முறைத் தேர்வுகளும் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் நடை பெற்றன.
இதுகுறித்து, சிலம்பாட்டம் பட்டய வகுப்பில் சேர்க்கை பெற்ற 63 வயது சிலம்ப ஆசானாகிய கலைச்செழி யன் கூறுகையில், “என்னைப் போன்ற சிலம்ப ஆசான்கள் பல் வேறு காலங்களில் கற்றுக் கொள்ளாத அரிய செய்தி கள், இந்த பட்டய வகுப்பின் மூலம் அறிந்து கொள்ள நல்வாய்ப்பாக அமைந்தது.
சிலம்பாட்டத்தினை நாட்டுப்புறக்கலை வடி வில் மட்டுமே பயின்றுவந்த பலருக்கும், முறையான பாடத்திட்டத்தை வகுத்துப் பயிற்சியளிக்கப்பட்டது மட்டுமின்றி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகள் குறித்தும், அப்போட்டிகளுக்கு கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்தும் செய்முறையுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்ப் பல்கலைக்கழகத்தினருக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறேன்.
இதனை மேலும் தொடரும் வகையில், சிலம்பாட்டத்தில் முதுகலை பட்டய வகுப்பும் தொடங்கினால், தமிழரின் மரபுக்கலையான சிலம்பாட்டத்திற்குப் புத்துயிர் அளித்த பெருமை தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும் கிட்டும்” என்றார்.