புதுக்கோட்டை, செப்.4 - புதுக்கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், அறிவியல் கண் காட்சியினை மாவட்ட ஆட்சியர் மு.அருணா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி புதுக் கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திறந்து வைக்கப் பட்டது. மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு செயல் முறைகள் கேட்டறியப் பட்டன. அறிவியல் படைப்பு களை காட்சிப்படுத்திய மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது” என்றார். முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம், மாவட்ட சமூகநல அலுவ லர் க.ந.கோகுலப்பிரியா, பள்ளி தலைமை யாசிரியர் தமிழரசி, முதன்மைக் கல்வி அலுவ லரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) வெள்ளைச்சாமி, மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மெ.சி.சாலை செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.