திருச்சிராப்பள்ளி, ஏப்.19-
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கம்பரசம் பேட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வருவதாக புகார் அளித்தும் முறையான நடவ டிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து புதனன்று திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத் தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பொதுமக்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். சாலை மறியலால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.