districts

img

தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கவேண்டும். தினக்கூலி ரூ.750 வழங்க வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் 89 ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் ரசல், மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநகர் செயலாளர் தா.ராஜா, உப்பு தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சங்கரன்,   காளிமுத்து உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.