districts

img

அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் குளத்தில் அதிகாரிகள் துணையுடன் மணல் கொள்ளை?

மயிலாடுதுறை, அக்.7 - கோயில் குளத்தில் அதிகாரிகள் துணையுடன் மணல் கொள்ளை நடப் பதை கண்டித்து போராட்டம் நடை பெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தா லம் ஒன்றியம் பெரம்பூரில் இந்து சமய  அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் குளத்தில் அதிகாரிகளின் துணையோடு நடைபெறும் மணல்  கொள்ளையை கண்டித்து சனிக்கிழமை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரம்பூர் மெயின்ரோட்டில் சாலை  மறியல் நடைபெற்றது.  கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி.விஜயகாந்த் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். துரைராஜ், மாவட்டக் குழு உறுப் பினர்கள் டி.ஜி.ரவி, அறிவழகன், ராம குரு உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர்.  பெரம்பூர் கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோ யில் உள்ளது. இக்கோயில் குளத்தில் தூர்வாரும் பணி என்ற பெயரில் இராட்சத எந்திரங்களை வைத்து 18 அடி  ஆழத்திற்கு மேல் குழிதோண்டி, 300 லாரிகளில் ஏற்றக்கூடிய அளவிற்கு மணலை குவித்து வைத்து, அதை விற்பனை செய்ய திட்டமிட்டு வரு கின்றனர். அந்த கோயில் சிதிலமடைந்த நிலையில், புதுப்பிக்கும் பணிகள் முடி வுற்று கடந்த ஏப்ரல் மாதம் குடமுழுக்கு  நடத்தப்பட்டது. கோயிலின் திருக் குளத்தை சுற்றி பக்கவாட்டுச் சுவர்  கட்டும் பணிக்காக இந்து அறநிலையத் துறை சார்பில் ரூ.87 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு தற்போது பணி கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குளத்தை தூர்வாரு வதாக கூறி, மணலை திருடி முறைகே டாக விற்க அறநிலையத்துறை அதிகாரி களே துணையாக இருப்பதாக அப்பகுதி  மக்கள் குற்றம்சாட்டி, போராட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர். போராட்டம் குறித்து அறிந்து வந்த  அதிகாரிகள், தூர்வாரும் பணியை நிறுத்தி, ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக வும், சட்டவிதிகளை மீறி முறைகேடாக 18 அடி ஆழத்திற்கு பள்ளங்களை தோண்டி மணல் எடுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதாகவும் உறுதி யளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.