தஞ்சாவூர், ஜூலை 5-
ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் சங்கத் தலைவர் இ.வீ.காந்தி தலைமையில் நடை பெற்றது.
கூட்டத்தில், “அரசு தேங்காய் கொப்ப ரையை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, நீண்ட காலம் சேமிப்பு கிடங்கில் வைத்திருந்து, பின் வெளியிடுவதால் வெளிச் சந்தையில் கொப்பரை விலை குறைந்து, தென்னை விவசாயிகளுக்கு பாதகம் ஏற்படு கிறது. எனவே, அரசு இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.
அதிகரித்து வரும் இளநீர் தேவையை கருத்தில் கொண்டு இளநீர் உற்பத்தியா ளர்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து, விலை நிர்ணயம் உட்பட அனைத்தையும் முடிவு செய்வது. தேங்காயின் நற்பலன்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியும் வகை யில் பரப்புரை மேற்கொள்வது. தென்னை விவசாய நிலங்களில் ரசாயன உரங்களை குறைத்து, நீடித்த நிலையான மகசூல் பெற நடவடிக்கை மேற்கொள்வது. பேராவூரணி பகுதி தென்னைக்கு புவிசார் குறியீடு பெறு வது தொடர்பாக குழு அமைத்து செயல்படு வது.
தென்னை விவசாயிகளின் கோரிக்கை களை வலியுறுத்தி பேராவூரணி வேதாந்தம் திடலில், ஜூலை 23 (ஞாயிறு) அன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணா விரதம் நடத்துவது” என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.