districts

நிழற்குடைகளை அகற்றி பயணிகளை வதைக்கும் கரூர் மாநகராட்சி

கரூர், மே 24-

    பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், நிழற்குடைகளை அகற்றி பயணிகளை வெயிலில் காக்க வைக்கும்  கரூர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்ட னம் தெரிவித்துள்ளது.

   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச்  செயலாளர் மா.ஜோதிபாசு ஆகியோர் பேசினர். கரூர் மாவட்டம் மட்டுமின்றி திண்டுக் கல், நாமக்கல், திருச்சி மாவட்ட ஏழை, எளிய மக்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினந் தோறும் சிகிச்சைக்காக புறநோயாளி கள் மற்றும் உள் நோயாளிகளாக வரு கின்றனர்.

    ஆனால் கரூர் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத் தால் அதற்கான முடிவுகளை வழங்குவ தற்கான மருத்துவர் பணியிடம் காலி யாக உள்ளது. ஸ்கேன் முடிவுகளை நோயாளிகள்  பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்க  வேண்டியுள்ளது. இதனால் அவசர  சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள்  பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    எனவே கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக எம்ஆர்ஐ ஸ்கேன் மருத்துவரை பணி  நியமனம் செய்ய, தமிழ்நாடு மருத்துவத்  துறை நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவ தற்கு வருகிற நோயாளிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப லிப்ட் வசதி இல்லை.

   தற்பொழுது செயல்பட்டுக் கொண்டி ருக்க கூடிய லிப்ட்டும் அவ்வப்போது பழுதாகி விடுகிறது. எட்டு மாடி கட்டிடம் கொண்ட இந்த மருத்துவமனையில் லிப்ட் வசதி இல்லாமல் ஏழு மாடி ஏறி சென்று சிகிச்சை பெறுவது என்பது, நோயாளிகளை மேலும் நோ யாளிகளாக்கி விடும்.  

   லிப்ட்டுக்காக நீண்ட நேரம் நோயா ளிகள், பொதுமக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் லிப்ட்களை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவக் கல்லூரி  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கரூர் பேருந்து நிலையத்தில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருச் செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்து மிடத்தில் இருந்த கடைகள், நிழற்குடை கள் கரூர் மாநகராட்சி நிர்வாகத்தால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவு இருப்பதால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

    கடும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் பெரும் இன்னல்களை தினமும் சந்தித்து வருகிறார்கள். உட னடியாக அப்பகுதியில் புதிய நிழற்குடை  அமைக்க வேண்டும். தற்காலிக நிழற் குடை அமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கரூர் மாவட்டக் குழு கேட்டுக்  கொண்டுள்ளது.