districts

img

இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து சிறைவாசிகளின் மறுவாழ்வு

திருச்சிராப்பள்ளி மகளிர் தனிச்சிறை வளாகத்தின் முன்புறம், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து சிறைவாசிகளின் மறுவாழ்வு நோக்கத்திற்காக முற்றிலும் சிறைவாசிகளை ஊழியர்களாக கொண்ட ‘ஃபிரீடம் புதிய பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தை’ சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் புதனன்று திறந்து வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் தலைமை இயக்குநர் மகேஸ்வர் தயாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.