districts

img

ராஜராஜன் பள்ளியில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள்

தஞ்சாவூர், மே 22-  

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வீரியங் கோட்டை - உடையநாடு ராஜராஜன் நர்சரி பிரைமரி பள்ளியில், ராஜராஜன் கல்வி நிறுவனம், கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து மாநில அளவி லான தடகள போட்டிகளை நடத்தினர்.  

    திமுக தஞ்சை தெற்கு  மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர் தலைமை வகித் தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், ஊமத்தநாடு ஊராட்சி மன்றத் தலைவர் குலாம் கனி, காரைக்குடி அழகப்பா பல்கலை., சி.மாதவன், பேராவூரணி நகர வர்த்தகர் சங்க தலைவர் ஆர்.பி.ரா ஜேந்திரன், மாவட்ட கவுன்சி லர் சுவாதிகாமராஜ், வீரியங் கோட்டை ஊராட்சி தலைவர் பரிமளாஅய்யப்பன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். பள்ளியின் தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் வரவேற்றார்.

   பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்திசேகர், பெரு மகளூர் பேரூராட்சி தலை வர் சுந்தரத்தமிழ் ஜெய பிரகாஷ், கரம்பக்காடு ஊராட்சி தலைவர் அர்ச்சனா குகன், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் இலக்கியா நெப்போலியன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    கெயின் ஸ்போர்ட்ஸ் அகா டமி தலைவர் நீலகண்டன் நன்றி கூறினார். மரு.நீலகண்டன், மாவட்ட அமெச்சூர் கபடி கழக துணைத் தலைவர் ராஜா, புதுக்கோட்டை அரசு  மருத்துவக்கல்லூரி மருத்து வர் சந்திரசேகர் ஆகியோர்  தடகளப் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

   போட்டியில், பேராவூ ரணியை சுற்றியுள்ள பள்ளி  மாணவர்களுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகளும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.