districts

குறைந்தபட்ச கூலியை ரூ.600 ஆக உயர்த்துக! வி.தொ.ச லால்குடி ஒன்றிய மாநாடு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, நவ.13- அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்க லால்குடி ஒன்றிய 10-வது  மாநாடு சங்க துணைத் தலைவர் எஸ்.‌மார்ட்  டின் தலைமையில் நடைபெற்றது. மூத்த தோழர் கே.எஸ்.லூர்துசாமி மாநாட்டு கொடியை ஏற்றினார். மாவட்ட  தலைவர்  ஜெ.சுப்பிரமணியன் துவக்கவுரை யாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ். சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். சங்க  மாவட்ட செயலாளர் அ.பழநிசாமி நிறை வுரையாற்றினார்.  விவசாய தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலியை ரூ.600 ஆக உயர்த்தி  வழங்க வேண்டும். பட்டியல் மக்களின் நல னுக்காக ஒதுக்கீடு செய்த நிதி ரூ.927 கோடி யை செலவழிக்காமல், 5 ஆண்டுகளில் திரும்ப எடுத்துக் கொண்டதை உடனடியாக வழங்க வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை லால்குடி, பூவாளூர் போன்ற நகரங்களில் அமலாக்க வேண்டும். வீடில்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனையும், வீடும் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியத்தின் புதிய தலைவராக செல்வி, செயலாளராக சி.கே.கே.பாலா, பொருளாளராக பி.ராஜேஷ், துணைத் தலைவராக எஸ்.மார்ட்டின், துணைச் செய லாளராக அருள்தாஸ் உட்பட 13 பேர்  கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய யப்பட்டது. மோகன் நன்றியுரையாற்றினார்.  வெண்மணி, கணேசன் செங்கொடி இயக்க பாடல்களை பாடினர்.