ஆக.20 - ரேசன் கடைகளில் அத்தியா வசியப் பொருட்கள் அனைத்தை யும் தடையின்றி வழங்கக் கோரி செவ்வாயன்று மாதர் சங்கம் சார்பில் ரேசன் கடைகள் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள ரேசன் கடைகள் முன்பு செவ்வாய்க் கிழமை மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரேசன் கடைகளில் அத்தியா வசியப் பொருட்கள் அனைத்தை யும் தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும். மண்ணெண்ணெய் ரேசன் கார்டுக்கு 2 லிட்டர் வீதம் வழங்க வேண்டும். ரேசன் கார்டுக்கு வழங்கப்படும் அரிசி யில் பிடித்தம் செய்யாமல் 5 கிலோ கோதுமை வழங்க வேண் டும். ரேசன் பொருட்களை தரமாக வழங்க வலியுறுத்தி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள பின்னவாசல் ரேசன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கிளைச் செயலாளர் எஸ்.தமிழரசி தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் பி.கோமதி, ஒன்றியச் செயலாளர் எஸ்.திரி புரா, ஒன்றியத் தலைவர் ஆர். விக்டோரியா ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி கண்டன உரை யாற்றினர். குடவாசல் நகரக் குழு சார்பாக அண்ணா தெற்கு வீதியில் உள்ள ரேசன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் பா.பமீதா தலைமை வகித்தார். மாதர் சங்கத் தின் நகரச் செயலாளர் டி.ஜி. தமிழ்செல்வி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் அம்பேத்கர் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். வலங்கைமான் ஒன்றியத்தில் 5 ரேசன் கடைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமப்பா தோட்டத்தில் ஒன்றியத் தலைவர் எஸ்.சத்தியபாமா, சார நத்தத்தில் ஒன்றியச் செயலா ளர் ஆர்.சந்திரோதயம், பூனாயிருப் பில் ஒன்றிய துணைத் தலைவர் ஆர்.ஜெயந்தி, பூந்தோட்டத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் இ.மைதிலி, நெப்புகோவிலில் ஒன்றியக் குழு உறுப்பினர் சித்ரா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் என்.இராதா மற்றும் பலர் கண்டன உரையாற்றி னர். சங்கத்தின் சார்பாக நீடா மங்கலத்தில் உள்ள ரேசன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஜே.ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆர்.சுமதி கண்டன உரையாற்றினார்.
அரியலூர்
அரியலூர் மற்றும் ஜெயங் கொண்டம் அருகே உள்ள கீழக் குடியிருப்பு மற்றும் புதுச்சாவடி பகுதி ரேசன் கடைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழக்குடியிருப்பு ரேசன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் பத்மாவதி தலைமை வகித் தார். மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பல்கீஸ், கோவிந்தராஜ், அருணாச்சலம், ஒன்றிய குழு உறுப்பினர் அமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுச் சாவடி ரேசன் கடை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் மீனாட்சி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சிவசங்கரி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரியலூரில் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றியத் தலைவர் ரோஸி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.அம்பிகா, ஒன்றியச் செயலாளர் தனலட்சுமி, மாவட்டப் பொருளாளர் மலர் கொடி, பாக்கியம், சிஐடியு தலை வர்கள் பங்கேற்றனர்.