districts

img

ரெங்கநாதர் கோவிலில் பணிபுரியும் 120 தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக!

திருச்சிராப்பள்ளி, ஜன.29 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறி யிருந்ததாவது:  திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் கடந்த 16  ஆண்டுகளாக 120 தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப் படையில், பத்மாவதி என்ற நிறு வனத்தில் பணிபுரிந்து வரு கின்றனர். இந்நிலையில் கோவில் நிர்வாகம் ஜனவரி 31  அன்றுடன் 120 தூய்மைப் பணியாளர்களையும் வேலையை விட்டு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் பணிபுரியும் தொழிலாளர்கள் செய்வதறியாது உள்ளனர். 120 தூய்மைப் பணி யாளர்களும் வாழ்வதற்கு வேறு வழி இல்லாமல் உள்ள னர். பத்மாவதி ஒப்பந்த நிறுவ னமும், மாவட்ட ஆட்சியர் தீர்மா னித்த குறைந்தபட்ச தினக் கூலி ரூ. 679-ஐ வழங்காமல் மாதம் ரூ.10,200 மட்டுமே வழங்கி வருகிறது.  எனவே தூய்மை பணியா ளர்களின் வாழ்நிலையை காக்கும் பொருட்டு 120 தூய் மைப் பணியாளர்களும் ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோவி லில் தொடர்ந்து பணிபுரிய வும், குறைந்தபட்ச தினக்கூலி பெறவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்  கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.  மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா, சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதிச் செய லாளர் தர்மா, சிஐடியு நிர்வாகி கள் மருதைராஜ், சுப்பிர மணி, கோவிந்தன், வாலிபர்  சங்க ஸ்ரீரங்கம் பகுதி செய லாளர் சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.