districts

img

உடையார்கோவில் இடப்பிரச்சனை சிபிஎம் போராட்டம் ஒத்திவைப்பு

தஞ்சாவூர், பிப்.19- தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம் உடையார்கோவிலில், 1944-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் 90 ஏழை விவ சாயிகளுக்கு வழங்கப்பட்ட 75 ஏக்கர் நிலத்தில், நீண்ட நெடுங்காலமாக விவசா யம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா  வழங்க வேண்டும். மின்வாரிய அலுவல கத்திற்காக விவசாய நிலத்தை கையகப் படுத்தக் கூடாது என வலியுறுத்தி  மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றியக் குழு சார்பில், பிப்ரவரி 21-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அம்மாபேட்டை பேருந்து நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் பிப்.18-ஆம் தேதி (சனிக் கிழமை) பாபநாசம் வட்டாட்சியர் தலைமை யில், வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.  பாபநாசம் வட்ட மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், வருவாய் கிராம அலுவலர் மற்றும் அம்மாபேட்டை காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர்  கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி, என்.வி.கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், நகரச் செயலா ளர் ரவி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் கே.முனியாண்டி, ஒன்றியப் பொரு ளாளர் மயில்வாகனன், விவசாய தொழிலா ளர் சங்க ஒன்றியச் செயலாளர் கே.கே.சேகர், பாஸ்கர் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.  இந்தக் கூட்டத்தில், “சம்மந்தப்பட்ட இடப் பிரச்சனைக்கு மார்ச் 10-ஆம் தேதிக் குள் தீர்வு காணப்படும். அதுவரை எந்த ஒரு அரசுத் துறை அதிகாரிகளும், அந்த இடத்திற்கு ஆக்கிரமிப்பு அகற்றம் என வர மாட்டார்கள்” என வட்டாட்சியர் உறுதி அளித்தார். இதை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.