districts

img

பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை

மயிலாடுதுறை, ஏப்.8-  மயிலாடுதுறை மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட மகாதானத் தெரு,  பெரிய கடை வீதி, கச்சேரி  சாலை, கொரநாடு ஆகிய பகுதியில் உள்ள கடைகள்,  வணிக நிறுவனம், உணவ கங்கள், தேநீர் கடைகள் ஆகியவற்றில் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் பயன்படுத்தப்படு கின்றனவா என மாவட்ட  ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து ஆட்சி யர் கூறுகையில், ‘‘மயிலாடு துறை மாவட்டம் மகாதான தெரு, பெரிய கடை தெரு, கச்சேரி சாலை ஆகிய பகுதி யில் உள்ள வணிக நிறுவ னங்களில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. ஆய்வின் போது ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டு பிடிக்கப்பட்டது.  அதற்காக அவர்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இன்று ஒரே  நாளில் மட்டும் 5  டன்  பிளாஸ்டிக் பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள் ளன. ரூ.1 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொ டர்ந்து பெரிய கடை தெரு வில் மதுபான பாரில் ஆய்வு  செய்யப்பட்டதில், சுகாதா ரம் கடைபிடிக்காமல் இருப்பது தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து பார் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. எனவே தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத் தக் கூடாது மீறி பயன்படுத்தப் படும் பட்சத்தில் அபராதம்  விதிக்கப்படும். தொடர்ந்து  பிளாஸ்டிக் பயன்படுத்து வோர் மீது சட்டபூர்வமான நட வடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார். முன்னதாக பெரிய கடை  தெருவில் வணிக நிறுவனம் ஆய்வு செய்யப்படும் பொழுது இங்கு பிளாஸ்டிக் விற்பனை இல்லை என  விளம்பர பலகை வைக்கப்பட் டிருந்தது. அந்தக் கடையில் ஆய்வு செய்யப்பட்ட பொழுது பிளாஸ்டிக் பொருட் கள் முழுமையாக பயன் படுத்தப்படவில்லை என்பது  தெரியவந்தது. அதனால்  கடையின் உரிமையாள ருக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.