மயிலாடுதுறை, மே 1-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடியில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வா கம் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் ஓசோன் காற்றின் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்று லாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.
போட்டியை மாவட்ட ஆட்சியர். ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஆகி யோர் தொடங்கி வைத்தனர். போட்டி யில் மயிலாடுதுறை, நாகை திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பழைய பேருந்து நிலையம், காத் தான்சாவடி வழியாக 4 கிலோமீட்டர் தூரம் சென்று தரங்கம்பாடி கடற்கரை யில் மாரத்தான் ஓட்டம் முடிவடைந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா முருகன் ஆகியோர் சான்றி தழ்களை வழங்கினர். தொடர்ந்து கடற் கரையையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.
விழாவில், பேரூராட்சி மன்ற தலை வர் சுகுண சங்கரி, துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன், செயல் அலு வலர் பூபதி கமலக்கண்ணன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.