districts

எஸ்.பாறைப்பட்டி ஊராட்சிக்கு சுத்தமான குடிநீர் வழங்க அரசாணை

பொதுமக்கள் வரவேற்பு சின்னாளப்பட்டி, பிப்.24- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.பாறைப்பட்டி ஊராட்சியில் பாறைப்பட்டி, இராமநாதபுரம், கெண்டையம்பட்டி, கெப் புசாலபட்டி, வண்ணம்பட்டி ஆகிய கிரா மங்களில் 2500-க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர்.  அப்பகுதி  பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் முயற்சியில் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியில் உள்ள  காமராஜர் நீர்த்தேக்க பகுதியில் இருந்து ஒன்றிய அரசு, மாநில அரசு  மற்றும் மக்கள் பங்களிப்புடன் ரூ.2.98 மதிப்பில் நீர் இராட்சச நீர்  உறிஞ்சும் கிணறு அமைத்து குழாய்  மூலம் பாறைப்பட்டி கிராம பொது மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு தலா 55 லிட்டர் சுத்தமான குடிநீர் வழங்க தமிழக முதல்வர் உத்தரவுப்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  இதனால் அப்பகுதி பொதுமக் கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் திட்டத்தினை செயல்பாட்டிற்கு கொண்டு வந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் தமிழக முதல்வருக்கும்  அப்பகுதி பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர், இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் காணிக்கைச்சாமி கூறுகையில், ‘‘திண்டுக்கல் மாவட்டத்தில் பாறைப்  பட்டி ஊராட்சி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்  திருந்தாலும், மேடான பகுதி என்பதால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, காமராஜர் நீர்த்தேக்க பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குழாய் மூலம் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுத்தார். தமிழகத்திலேயே ஒரு ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக மட்டும் ரூ.2.98 கோடி ஒதுக்கி நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. எங்கள் பகுதி பொதுமக்களிடம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்.