பாபநாசம், ஜூலை 8 -
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே சுவாமிமலை மேலசாலையில் பாபநாசம் எம்.எல்.ஏ-வின் துணை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவின் இ-சேவை மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர் ஜவா ஹிருல்லா திறந்து வைத்தார். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன், இ-சேவை மையத்தின் மூலம் பயனாளி ஒருவருக்கு சான்றிதழ் வழங்கினார்