பொன்னமராவதி, ஜன.28 - தேசிய பெண் குழந்தைகள் தினத்தை யொட்டி ஆலவயல் அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டன. தேசிய பெண் குழந்தைகள் தினத் தையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆல வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில், அஞ்சல்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கும் விழா மற்றும் பெண் குழந்தைகள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட அஞ்சல்துறை கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன், பெண் குழந்தைகள் முன்னேற்றம், பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றி னார். பள்ளியில் பயிலும் பெண் குழந்தை களுக்கு மகளிர் மதிப்பு சேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு கணக்கு, பொன் மகள் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்குகள் தொடங்கி, குழந்தை களுக்கு சேமிப்பு கணக்குப் புத்தகங் களை வழங்கினார். நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் பிரபாகரன், தெற்கு உபகோட்ட அஞ்சலக ஆய்வாளர் சாலினி மற்றும் அஞ்சல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.