தஞ்சாவூர், ஏப்.18 -
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள காட்டாகல்படுகையைச் சேர்ந்தவர் சகாய சரண்ராஜ் (33). பொறியாளர். இவர் தனது மைத்துனர் சுதாகருடன் திருச்சி ராப்பள்ளியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் திங்கள் கிழமை மாலை ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.
தஞ்சாவூர் அருகே வல்லம் பிரிவு சாலை பகுதியில் சென்ற இருவரும் முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்றபோது கீழே விழுந்தனர். அப்போது, சகாய சரண்ராஜ் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி நிகழ் விடத்திலேயே உயிரிழந்தார். சகாய சரண்ராஜூக்கு திரு மணமாகி இரு மாதங்களே ஆகிறது.