districts

img

4 வழிச்சாலையால் வீடு இழப்பு இஸ்லாமிய விதவைப் பெண்ணுக்கு இழப்பீடு வழங்க தடையாக நிற்கும் அதிகாரிகள்

மயிலாடுதுறை, செப்.15 - மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள தலைச்சங்காடு கிராமத்தில் நான்கு வழிச்சாலையால் வீட்டை இழந்த இஸ்லாமிய விதவை பெண் ணுக்கு உரிய இழப்பீட்டை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், குறிப்பிட்ட ஓரிரு அதிகாரிகள் லஞ்ச தொ கையை எதிர்பார்த்து இழப்பீடு தொகை தரா மல் அலையவிடுவதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகளின் இந்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை  அமைக்கப்பட்டு வருகிற நான்கு வழிச்சாலையால் நிலங்களை இழந்த விவ சாயிகளுக்கும், வீடுகளை இழந்தவர்களுக் கும் உரிய இழப்பீடு முறையாக வழங்கப் படவில்லை என தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், செம்பனார்கோவில் அருகேயுள்ள தலைச்சங்காடு கிராமம் பெரு மாள்கோவில் தெரு பகுதியில் வசித்த கண வரை இழந்த பாத்திமா ஜொகரான் என்ற வயதான இஸ்லாமிய  பெண்ணின் வீடு நான்கு வழிச்சாலையால் அகற்றப்பட்டது. போதிய இழப்பீடு கேட்டு வயதான அந்த  பெண், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார்.  இதையடுத்து பாத்திமா ஜொகரான் உள்ளிட்ட குடியிருப்புகளை இழந்த 72 பேருக்கு இழப்பீட்டு தொகை வழங்க மாவட்ட  ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  ஒவ்வொருவரும் தலா 5 ஆயிரம் ரூபாய் குறிப்பிட்ட அதிகாரிகளிடம் லஞ்ச மாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால் பாத்திமா ஜொகரானோ தன்னிடம் லஞ்சம் கொடுக்க பண மில்லை என கூறியதால் இழப்பீட்டுத் தொகையை வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் கூறுகை யில், “தலைச்சங்காடு, அப்பராசப்புத்தூர், தலையுடையவர் கோவில்பத்து  உள்ளிட்ட பகுதிகளில் நான்கு வழிச்சாலை பணியால் வீடுகளை இழந்த அப்பாவி மக்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏராளமான குளறு படிகள் நடைபெறுகிறது. வீடு இழந்தவர்களுக்கு மாற்று இடம்  வழங்குவதிலும், பட்டாக்களை வழங்குவதி லும் வருவாய்த்துறை அலட்சியப் போக்கை கடைபிடிக்கிறது. தலையுடையவர் கோவில் பத்து கிராமத்தில் நான்கு வழிச்சாலையால் வீட்டை இழந்த முனியாண்டி குடும்பத்தினர் கடந்த ஒரு மாதமாக வீதியிலேயே வசிக்கும் நிலை நீடிக்கிறது. இச்சூழலில் தற்போது பாத்திமா ஜொகரான் என்பவ ருக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டை வழங்குவதற்கு குறிப்பிட்ட சில அரசு அதி காரிகள் தடையாக இருப்பது கண்டனத்திற் குரியது. மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், அதி காரிகள் அலட்சியப்படுத்துவதை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பதோடு, உடனடி யாக அந்த இஸ்லாமிய விதவை பெண்ணுக் குரிய இழப்பீட்டை வழங்கவில்லையெனில் போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.