கும்பகோணம், ஜன.5- அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்படுகிறது. இந்த கரும்பு களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய கரும்பு வயல்களில் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கும்பகோணம் வட்டாரத்தில் திருப்பு றம்பியம், தேவனாஞ்சேரி, கொத்தங்குடி, சேங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவ சாயிகள் செங்கரும்புகள் சாகுபடி செய்து ள்ளனர். அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பருவநிலை மாற்றம், பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளால் கரும்பு வளர்ச்சி பாதித்துள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரி வித்துள்ளனர். மேலும் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நிபத்தனையின்றி விவ சாயிகளிடம் இருந்து செங்கரும்பு களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், கும்பகோணத்தை, அடுத்த திருப்புறம்பியம், தேவளாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப் பட்டுள்ள செங்கரும்புகளை கொள்முதல் செய்ய வயல்களுக்கு அதிகாரிகள் தேரில் சென்று கரும்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது. மாவட்ட கூட்டு றவு பதிவாளர் பாலமுருகன், களஆய்வா ளர் அஸ்லப்பா, சரவணன், பொது வினி யோக திட்டம் முதுநிலை ஆய்வாளர் முத்து முருகன், துணை வேளாண் அலுவலர் சாரதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். உல்லியக்குடியில் ஆய்வு அரியலூர் மாவட்டம் உல்லியக் குடியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த செங் கரும்புகளை ஆட்சியர் பொ.ரத்தினசாமி சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், 2,48,876 முழுக் கரும்பு விவசாயிகளிட மிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள் முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிலுள்ள அலுவலர்களால் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழி காட்டு நெறிமுறைகளின்படி கரும்பின் தரம், உயரம் ஆகியவை வேளாண்மைத் துறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப் பட உள்ளது என்றார். இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவா ளர் தீபாசங்கரி, வேளாண் இணை இயக்கு நர் கீதா, பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் சாய்நந்தினி மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.