கும்பகோணம், மே 2-
கும்பகோணம் நகர் உதவிச் செயற்பொறியாளர் பிர காஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை பகுதியில் உள்ள துணைமின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்தி ரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கும்பகோணம் நகர் தவிர உமாமகேஸ்வரபுரம், கோ.சி. மணி நகர், தாராசுரம், எலுமிச்சங்காபாளையம், அண்ணல் அக்ரஹாரம், திப்பி ராஜபுரம், அரியத்திடல், சிவபுரம், உடையாளூர், சுந்தர பெருமாள்கோவில், நாச்சியார்கோவில், திரு நாகேஸ்வரம், முருக்கங்குடி, அய்யாவாடி, புதூர், ஆவணி யாபுரம், திருநீலக்குடி, பட்டீஸ்வரம், வலங்கைமான் ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.
ஆடுதுறை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதை யொட்டி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆடுதுறை, நர சிங்கம்பேட்டை, ஆவணியாபுரம், எஸ்.புதூர், திருவிடை மருதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவல் கும்ப கோணம் கோட்ட மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் மாதவன் தெரிவித்துள்ளார்.