districts

img

தபோநாயகிபுரத்தில் வாலிபர் சங்க புதிய கிளை

திருத்துறைப்பூண்டி, பிப்.14 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ஒன்றியம் சேகல் தபோநாயகி புரத்தில் வாலிபர் சங்க புதிய கிளை  துவக்க விழா திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளைத்தலைவர் ஜி.காளிதாஸ் தலைமை வகித்தார். வாலிபர் சங்க கொடியினை மாவட்டச் செயலாளர் கே.பி. ஜோதிபாசு ஏற்றி வைத்தார். வாலிபர் சங்கப் பெயர் பலகையை மாவட்டப் பொருளாளரும், ஒன்றிய செயலாளருமான ஏ.கே.வேல வன் திறந்து வைத்தார். புதிதாக இணைந்தவர்களை வாழ்த்தி, அவர்களுக்கு சால்வை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன் பேசினார்.  நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ், ஒன்றிய குழு உறுப்பி னர்கள் வி.வி.செந்தில்குமார், கே.மதிய ழகன், சிஐடியு பொறுப்பாளர் எம்.வீரா சாமி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ் வரி ரங்கசாமி மற்றும் கிராம கமிட்டி, கிளை செயலாளர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். தலைவராக காளிதாஸ், செயலாள ராக ஸ்டாலின், பொருளாளராக மகேந்தி ரன், துணை நிர்வாகிகளாக ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேர் கொண்ட நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.