கும்பகோணம், பிப்.28- கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தினை முன்னிட்டு, எல்.கே.ஜி. வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் அறிவி யல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இதில் மாணவ - மாணவிகள் ஆர்வ மாகப் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கோநகர் நர்சிங் கல்லூரி நிறுவனர் மைதிலி முத்துவேல் கலந்துகொண்டு மாணவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு களை கண்டு வாழ்த்தினார். கண்காட்சியில், நடக்கும் இயந்திர ரோபோ மனிதன், தீய ணைப்பு கருவி, நிலநடுக்க எச்ச ரிக்கை கருவி, கழிவு நீரோடை களில் பூச்சிக்கொல்லி இல்லா கொசு ஒழிப்புத் திட்டம், ட்ரோன், தானியங்கி தெரு விளக்கு, சூரிய ஒளியில் இயங்கும் மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிப் படுத்தினார். மேலும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக் கும் பள்ளி தாளாளர்கள் கார்த்திகேயன், நல்லாசிரியர் விருது பெற்ற பூர்ணிமா கார்த்திகேயன் பரிசினையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினர்.