districts

img

தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய கட்டிடங்களை நாகைமாலி எம்எல்ஏ திறந்து வைத்தார்

நாகப்பட்டினம், பிப்.9- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து ரூ.54.31 லட்சம் திட்ட மதிப்பீட்டில்  கட்டப்பட்ட 4 புதிய கட்டிடங்களை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி திறந்து வைத்தார். கீழ்வேளூர் ஒன்றியத்தில் எரவஞ்சேரி ஊராட்சியில் உள்ள மேல ஒதியத்தூர் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக நியாய விலை கடை கட்டிடம், கீழ்வேளூர் பேரூ ராட்சியில் உள்ள சந்தப்தோப்பு பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக  நியாய விலை கடை கட்டிடம், சாட்டிய குடி ஊராட்சியில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளிக்கூட கட்டிடம், கீழையூர் ஒன்றியம் சோழவித்தியாபுரம் ஊராட்சியில் ரூ.5.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்களை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி திறந்து வைத்தார்.  நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மரு. அருண் தம்புராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், கூடுதல் ஆட்சியர்  பிரதிவிராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், கீழ்வேளூர் பேரூராட்சி தலைவர்  இந்திராகாந்தி சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மேலும் சோழவித்தியாபுரம் ஊராட்சி யில் வேளாண் மற்றும் உழவர் நல துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலமாக விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.