“இயற்கை நமக்களித்த பெருங்கொடைகளில் ஒன்று பனைமரம்” விதையை மட்டும் விதைத்துவிட்டால் போதும் பலன் களை தடையின்றியும், தாமதமின்றி யும் வழங்கக் கூடியது பனை. மாறு பட்ட எல்லா மண் வகைகளிலும் எளி தாய் முளைத்துவிடக் கூடிய தமிழர்க ளின் பாரம்பரிய மரங்களில் ஒன்று. குறிப்பாக தமிழ் மரம் என்ற சிறப்பான அடையாளமும் பனைமரத்திற்கு உண்டு”. ஆண்டுதோறும் மூன்று வகை யாக குறிப்பாக நுங்கு, பதநீராகவும், பின்னர் பனம்பழமாகவும், விதைகள் முளைத்து கிழங்காகவும் மனிதர்க ளுக்கு பலன் தருகிறது. பனை வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி என்றும் மரத்தின் மட்டைகள் கூரை வீடுகளை கட்டவும், விசிறி மற்றும் அழகுபடுத்தும் பொருட்களை செய்யவும் உதவுகிறது. பனைமரம் வளர்ந்துள்ள இடங்க ளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வும், நீரின் தன்மையை சுத்திகரிக் கவும் பெரும்பங்காற்றுகிறது. பனை யின் நன்மை இவை மட்டுமல்ல, இன்னும் நிறைய இருக்கின்றன.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடி, திருக்கடையூர், தில்லையாடி, மருதம்பள்ளம், காட்டுச்சேரி என மாவட்டத்தின் அனைத்து கிராமங்க ளிலும் திரும்பும் திசையெங்கும் பனைமரங்கள் விளைந்து நிமிர்ந்து நிற்கிறது. பனை விதைகளை ஒவ்வொரு ஆண்டும் விதைத்து அறுவடை செய்து பக்குவமாக உப்புச் சேர்த்து வேகவைத்து பனைக் கிழங்குகளை விற்பனை செய்யும் காழியப்பநல் லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார் பனைக்கிழங்கு (பனங்கி ழங்கு) குறித்து பேசும்போது... “மலச்சிக்கலை போக்கும், உட லுக்கு வலு சேர்க்கும், இரும்புச் சத்து உள்ளது, கர்ப்பப்பை வலுப்பெறும், நோய் எதிர்ப்பு சக்தி அளிக்க கூடி யது, நார்ச்சத்து மிகுந்தது, குளிர்ச்சி யானது, புற்றுநோயை தடுக்கும், சர்க்கரையை கட்டுப்படுத்தி இன்சு லின் சுரபியை தூண்டகூடியது, புரத சத்து மிகுந்தது, எலும்புகளை வலுப்ப டுத்த கூடியது, இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்த கூடியது.
மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க கூடியது, பனைக்கிழங்கை பிரித்தெடுத்தப் பிறகு உள்ள அந்த வெறும் கொட்டைகளை சில நாட்க ளுக்கு பிறகு உடைத்து பார்த்தால் அதிலிருக்கும் சுளை மிகமிக சுவை யானதும் அதிக சத்தும் நிறைந்தது. பனைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகுந்த ஊட்டச்சத்து உணவு என சொல்லிக் கொண்டே போனார். ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் வரை கிடைக்கும் பனைக் கிழங்கை 3 வயது குழந்தைகளி லிருந்து எல்லோரும் சாப்பிடலாம். பனைக்கிழங்கை வேகவைத்து அதை நன்றாக காய வைத்து பொடி செய்து பசும்பாலில் இரண்டு, மூன்று கரண்டி போட்டு இரண்டு வேளையும் சாப்பிட்டால் அதற்கு நிகரான சத்து எதுவுமே இல்லைங்க. ஹார்லிக்சை விட சத்தானது; பாதுகாப்பானது; கெட்டும் போகாது என்றார் விவசாயி சிவக்குமார். திருக்கடையூரிலிருந்து தரங்கம் பாடி செல்லும் சாலையின் இரு புறமும் உள்ள ஏராளமான சாலை யோர கடைகளில் பனைக்கிழங்கு கள் அதிகபடியாக விற்பனையா கின்றன. சாகுபடி செய்த விவசாயி களின் அன்றாட தேவைகளை ஓரள விற்கு பூர்த்தி செய்யும் பனைக்கி ழங்கு வெறும் வியாபார பண்டமல்ல, மனித உடல்நலத்தை சீராக்கி பாது காக்கும் நல்மருந்தும் கூட. - செ.ஜான்சன், தரங்கம்பாடி