மன்னை இராஜகோபாலசாமி அரசினர் கலைக்கல்லூரி ஆண்டு விழா முதல்வர் முனைவர் து.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆண்டு அறிக்கையினை வேதியியல் துறைத்தலைவர் முனைவர். சோ.ரவி வாசித்தார். மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை த.சோழராஜன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் துவக்க கால ஆளுமைகளை நினைவு கூர்ந்து மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா உரையாற்றி, முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் ச.மாறன் வரவேற்றார்.