மதுரை, ஆக.5- யங் இந்தியன்ஸ் மதுரை சார்பில் மாமதுரை விழா வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மாமதுரை விழாவின் மூத்த வழி காட்டி சு.வெங்கடேசன் எம்.பி., யங் இந்தியன்ஸ் தலைவர் பைசல் அஹமத், ஒருங்கிணைப்பாளர் விக்ராந்த் கார் மேகம் மற்றும் யங் இந்தியன்ஸ் துணைத் தலைவர் சென்ஹர் லால் பொறுப்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளார்கள். மதுரையில் சுற்றுலா, பாரம்பரியம், கலை வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. உணவு திருவிழா மற்றும் வர்த்தக பொருட்காட்சி தமுக்கம் மைதானத்தி லும், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் மகளிர் தொழில் முனைவரால் நடத்தப்படும் பொருட் காட்சி காந்தி மியூசியத்திலும், பலூன் திருவிழா வைகை கரையோரத்திலும், இரண்டடுக்கு பேருந்து பவனி மற்றும் இறுதியாக மதுரை கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் அலங்கார ஊர்தி மற்றும் கலைஞர்களின் பேரணி என மாமதுரை விழாவில் மொத்தம் 20 நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. மாமதுரை விழா ஆகஸ்ட் 8ம் தேதி தமுக்கத்தில் துவங்குகிறது. தமிழக முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கி வைக்கிறார். இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் கள், மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணை யாளர் மற்றும் காவல்துறை ஆணையா ளர் ஆகியோர் கலந்து கொள்கின்ற னர். இதனையொட்டி மதுரை புகழ் பாடல்களை ஞாயிறன்று சொக்கிகுளம் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதி யில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட, டாக்டர் ஹேமா சதீஷ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சி குறித்து சு.வெங்கடேசன் எம்.பி., கூறுகையில், “கடந்த முறை மாமதுரை போற்றுவோம் நிகழ்ச்சி மதுரை கல்லூரியில் இருந்து துவங்கி யது. இந்த முறை தெப்பக்குளத்தில் இருந்து துவங்குகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் உள்ள சுவர் களில் சித்திரங்கள் வரையும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. மாமதுரை விழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து கொண் டிருக்கின்றன. மதுரை மாவட்ட நிர்வாக மும் மாநகராட்சியும் இணைந்து ஒரு நாள் தூய்மை பணி நடத்துவதாக திட்ட மிட்டுள்ளார்கள், அதற்கான அறிவிப்பு அரசு நிர்வாகத்தில் முறையாக அறி விப்பார்கள். பண்பாட்டு விழா என்பதை “யங் இந்தியன்ஸ்” (இளையோர் இந் தியா) சார்பில் மதுரையை தூய்மைப் படுத்துவது, மதுரையில் பெருமை களை நினைவு கூர்வது, மதுரையை அடுத்த கட்ட வளர்ச்சிக்காக கொண்டு செல்வது, இப்படி பல்வேறு நிகழ்வு களை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். மேலும் இந்த விழாவை சிறப்பாக நடத்து வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண் டிருக்கிறார்கள் என்று கூறினார். தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் யங் இந்தியன்ஸ் தலைவர் பைசல் அஹ மத், ஒருங்கிணைப்பாளர் விக்ராந்த் கார்மேகம் மற்றும் துணைத் தலைவர் சென்ஹர் லால் ஆகியோர் கூறுகையில், “இந்த நிகழ்ச்சி ஏற்பாடு என்பது சமூ கம் மற்றும் சுற்றுலா, உடல் ஆரோக்கி யம், தொழில் வளர்ச்சி போன்றவை களை சார்ந்து இருக்கும். மதுரையில் திருமலை நாயக்கர் மகால் என்பது பெரும்பாலும் மதுரை மக்களுக்கு தெரி யும். அதே நேரத்தில் மதுரையைச் சுற்றி யுள்ள சமண மலைகளை பற்றி பெரும் பாலும் தெரியாது. அவற்றை பாரம்பரிய நடைபயணம் மூலம் மதுரை மக்க ளுக்கு தெரிய வைப்பதன் மூலம் சுற்று லாவும் மேம்படும். அந்த வகையில் தான் இரண்டடுக்கு பேருந்து (டபுள் டக்கர் பஸ்) பாரம்பரியத்தையும் சுற்று லாவையும் மேம்படுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தொழில் துறை சார்ந்து இங்கு 150 நிறு வனங்கள் ஸ்டால்கள் அமைக்கின்றார் கள். மதுரையின் சிறப்பு உணவு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்து அமைக்கப் படுகிறது. அதேபோல் 5 வயது முதல் 12 வயது குழந்தைகள் வரை பயனடை யும் வகையில் “கிட்ஸ் கார்னர்” என்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. “மதுரை கார் டேலண்ட்” பள்ளி குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேல் உள்ள வர்களுக்கு என்று விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் 300 பேர் பங்கேற்று அவற்றிலிருந்து ஒவ்வொரு விளையாட்டிலும் எட்டு பேர் தேர்வு செய்துள்ளோம். இதில் அனைவருக் கும் பொருத்தமான மற்றும் அனைத்து வயதிற்கு ஏற்ற வகையில் நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்துள்ளோம். பலூன் திருவிழா என்ற நிகழ்வு இதுவரை மது ரையில் நடத்தப்பட்டதில்லை. முதல் முறையாக இங்கே நடத்தப்பட உள் ளோம். மதுரைக்கான புதிய பதிவினை அது கொடுக்கும் என்று நம்புகிறோம் என்று கூறினார்கள்.