districts

img

லோடு ஆட்டோ தொழிலாளர் சங்க பெயர்ப் பலகை திறப்பு விழா

அரியலூர், செப்.18- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிலால் நான்கு சாலை பேருந்து நிறுத்தம் அருகே சிஐடியு சார்பில் லோடு ஆட்டோ தொழிலாளர் சங்க கொடியேற்று விழா மற்றும் பெயர்பலகை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லோடு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் பைரவன், துணைத்தலைவர் ஆர்.வீரமணி, துணை செயலாளர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட தலைவர் ஆர்.செந்தில்வேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, சிஐடியு கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சிற்றம்பலம் பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். லோடு ஆட்டோ சங்க பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.