districts

img

குடவாசல் பேரூராட்சியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் வாக்குச் சேகரிப்பு

குடவாசல், பிப்.12 - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் குடவாசல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள் உள்ளன. இதில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 2 ஆவது வார்டில், குடவா சல் ஒன்றியச் செயலாளர் ஆர்.லெட்சுமியும், 15 ஆவது வார்டில் வேட்பாளர் ஆர்.அமுதாவும், திமுக  சார்பில் 3 ஆவது வார்டில் திமுக வார்டு பொறுப்பாளர் பைசல் (எ)  ஹச்.ஹசன்முகமதுவும் போட்டி யிடுகின்றனர். இதில் சிபிஎம் வேட்பாளர்க ளுக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்தி ரம் சின்னத்திலும், திமுக வேட்பாள ருக்கு உதயசூரியன் சின்னத்திலும், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி  தலைமையில், திமுக பேரூர் கழக செயலாளர் ஆர். முருகேசன் முன்னிலையில் வாக்குச்  சேகரிப்பில் ஈடுபட்டனர். சென்ற இடமெல்லாம் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வர வேற்றனர். வாக்குச் சேகரிப்பில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, திமுக தேர்தல் பொறுப்பாளர் பெரியவர் முத்து பிள்ளை, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் டி.ஜி.சேகர், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கே. பகத்சிங், மாதர் சங்க ஒன்றிய செய லாளர் கே.ஜெகதீஸ்வரி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கூட்ட ணியினர் கலந்து கொண்டனர்.